ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா..!

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனரா, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ பங்கேற்றனர். இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் அலுவலகம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மார்சிலோ தற்போது நலமாக இருக்கிறார். மேலும், அவருடன் இருந்த மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனையடுத்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் நியூயார்க்கில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள உள்ளார் என்று தெரிவித்துள்ளது.