தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரிட்டன் பிரதமர் !

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அதில் கொரோனா இருப்பதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், இங்கிருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.இதன் பின்  பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு நிமோனியா காய்ச்சல் இல்லை என்றும் கொரோனாவையும் விரைவில் வெல்வார் என்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.