உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி நகரில் சகோதரிகள் இருவர் வீட்டில் புதைத்து வைத்து கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக்த்தில் கஞ்சா விற்பனை தற்போது அதிகரித்து வருவதை நாம் தினமும் செய்திகள் வாயிலாக பார்த்து வருகிறோம் . அதே போல, அதனை தடுக்க அரசு, காவல்துறையினர் மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் படி, அன்மையில் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா விற்று வந்த சகோதரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி நகரில் சகோதரிகள் இருவர் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில், அவர்கள் வீட்டிற்கு ரகசியமாக சென்ற இன்ஸ்பெக்ட்டர் ராஜ் கண்ணன் தலைமையிலன குழு, தீவிர சோதனையில் ஈடுபட்டது.
அப்போது அவர்கள் வீட்டில் புதைத்து வைத்த 5.2கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து வீரமணி, பாப்பாத்தி ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.