இரு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற 95 வயதுடைய கேசவ் தத் காலமானார்!

இரு முறை ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற 95 வயதுடைய கேசவ் தத் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

இந்தியாவை சேர்ந்த ஒலிம்பிக் வீரர் கேசவ் தத் அவர்கள் 1948 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன்பின் 1952 ஆம் ஆண்டு ஹெல்சிங்கி எனும் விளையாட்டுப் போட்டியில் அவர் இரண்டாம் முறையாக தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கேசவ் தத் அவர்களுக்கு 95 வயதாகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சந்தோஷ்பூர் எனும் இடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வயது முத்துவின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Rebekal