ஒரே இடத்திற்கு இரண்டு பட்டா.! வீடுகளை இடிக்க வந்த ஜேசிபியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.!

ஒரே இடத்திற்கு இரண்டு பட்டா வைத்திருந்த வீடுகளை இடிக்க வந்த ஜேசிபியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.

திருப்பத்தூர் அருகே ஒரே இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் தவறுதலாக இரண்டு முறை பட்டா கொடுத்துள்ளனர் என தெரிகிறது. மேலும், தவறுதலாக பதியப்பட்டதாகவும், ஆக்கிரமிப்புநிலத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதனால், அரசு அதிகாரிகளின் உத்தரவின் பேரில், குடியிருப்புகளை இடிக்க ஜேசிபி எந்திரம் வந்துவிட்டது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஜேசிபி எந்திரந்தை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். 2 முறை பட்டா வழங்கியது அரசு அதிகாரிகளின் தவறு எனவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment