விமர்சனத்திற்கு உள்ளான ட்விட்டர் தலைமையக படுக்கை அறைகள்.! எலன் மஸ்க் பதிலடி.

ட்விட்டர் தலைமையகத்தில் உள்ள படுக்கையறைகள் குறித்து சான் பிரான்சிஸ்கோ அதிகாரிகள் நடத்த உள்ள விசாரணைக்கு மஸ்க் பதிலளித்தார்.

கடந்த சில வாரங்களில் ட்விட்டர் அலுவலகத்தில் உள்ள பல கலந்தாய்வு அறைகள் தற்காலிக படுக்கையறைகளாக மாற்றியுள்ளது, சோர்வான ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை அறைகளில், படுக்கை மேசைகள் மற்றும் நாற்காலிகள் போன்றவைகள் உள்ளன. ட்விட்டர் தலைமையகத்தில் “ஒரு மாடிக்கு நான்கு முதல் எட்டு அறைகள்” இருக்கலாம் என்று ஓர் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

ட்விட்டர் தனது தலைமையகத்தில் உள்ள பல அலுவலக அறைகளை ஊழியர்களுக்கான உறங்கும் இடமாக மாற்றியுள்ளதாக சான் பிரான்சிஸ்கோ கட்டிட ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனத்திற்கு மஸ்க் “ஃபெண்டானில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக சோர்வடைந்த ஊழியர்களுக்கு படுக்கைகளை வழங்கும் நிறுவனங்களை சான் பிரான்சிஸ்கோ நகரம் விமர்சிக்கிறது” என்று கூறியுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment