தூத்துக்குடி துறைமுக ஊழியர் கஞ்சத்தனத்தால் 100 சவரன் நகை கொள்ளை போனதாக நாடகமாடிய மனைவி!

144 ஊரடங்கு தடை உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில், நேற்று ஏப்ரல் மூன்றாம் தேதி தூத்துக்குடி தாளமுத்துநகர் பெரிய செல்வம் நகரில் உள்ள தூத்துக்குடி துறைமுக ஊழியர் ஆகிய வின்சன்ட் என்பவரின் வீட்டில் அன்று இரவு மர்ம நபர்கள் புகுந்து அவரது மனைவி ஜான்சி படுத்திருந்த அறையின் வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பக்கத்தில் உள்ள அறையில் இருந்த பீரோவில் 100 சவரன் நகையும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக நேற்று காலை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதன் பெயரில் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் தூத்துக்குடி துறைமுக ஊழியர் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கிடைக்காமல் தள்ளாடி கொண்டிருந்தனர். நாயும் யாரையும் கவ்வவும் இல்லை கண்டுபிடிக்கவும் இல்லை. சிறிது தூரம் ஓடிச் சென்று மீண்டும் திரும்பிவிட்டது என கூறப்பட்டது. அதன் பின்பு கைரேகைகளை பதிவு செய்த போலீசார் அவர் துறைமுக ஊழியர் வின்சன் சவேரியார் பிச்சை அவர்களின் மனைவி ஜான்சிராணி இடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது துருவித்துருவி விசாரணை செய்ததில் தனது கணவரின் கஞ்சத்தனத்தால் 100 பவுன் தங்க நகையை தானே தனது வீட்டின் அருகில் உள்ள வெற்றிடத்தில் புதைத்து வைத்துவிட்டு வீட்டினரை நம்ப வைப்பதற்காக 100 பவுன் நகையும் கொள்ளை அடிக்கப்பட்டதாக நாடகமாடியது ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் காவல்துறையினரின் துரிதமான செயல்பாட்டால் இந்த கொள்ளை நாடகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்போது மக்களிடையே வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கணவரின் கஞ்சத்தனத்தால் நகையை பதுக்கி வைத்து கொள்ளை போனதாக நாடகமாடிய சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rebekal

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

3 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

4 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

4 hours ago