உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதற்காக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பல்வேறு கடைகள் கல்விக்கூடங்கள் ஆலயங்கள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடைகளும், அத்தியாவசிய கடைகள், மளிகை கடை காய்கறி கடை மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவைகள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திருச்சியில் உள்ள உறையூரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் பேரில் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் அந்த மசாஜ் சென்டர் சென்று சோதனை நடத்தி உள்ளார்.
அப்பொழுது ஊரடங்கு உத்தரவை மீறி உரிமை இல்லாமல் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருச்சி மசாஜ் சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதிகாரிகள் அங்கு சென்றதை அடுத்து விசாரணையின்போதே பணியில் இருந்து இரண்டு பெண்களும் தப்பி ஓடி உள்ளனர்.
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…