தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காட்சி..!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காட்சி, பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தீவிரவாதிகளுடனான சண்டையின்போது, இரு குண்டுகள் துளைத்து ராணுவ வீரர் தீபக் நைன்வால் ((Deepak nainwal)) என்பவர் காயமடைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு குடும்பத்தினரும், ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்திய நிலையில், ராணுவ வீரரின் 8 வயது மகள் கண்ணீருடன் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த காட்சி பார்ப்பவர்களின் மனதை கலங்க வைத்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment