கிரிக்கெட் பந்தை கேட்ச் பிடிக்கும்போது நேர்ந்த சோகம்.! இலங்கை வீரருக்கு நடந்த பரிதாபம்.!

இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா, கேட்ச் பிடிக்கும்போது பற்கள் உடைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போன்று இலங்கையில் நடத்தப்படும் எல்பிஎல் எனும் லங்கா பிரீமியர் லீக்கில் காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கண்டி அணியின் சமிகா கருணாரத்னே பீல்டிங்கின் போது நுவானிடு பெர்னாண்டோ, அடித்த பந்தை கேட்ச் எடுக்கும் போது, பந்து பட்டு பற்கள் உடைந்துள்ளன.

சமிகா, கேட்சை எடுத்துவிட்டார் எனினும் ரத்தம் சொட்ட அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். இந்த கேட்ச் முயற்சியில் 4 பற்களை இழந்துள்ள சமிகா கருணாரத்னே, சிகிசைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment