எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.!

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட கூடுதல் காலஅவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது.

முன்னதாக, 2023-2024ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் சேர ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை கால அவகாசத்தை மருத்துவ கல்வி ஆராய்ச்சி நீட்டித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் TNHealth என்ற இணையதளத்தில், நாளை மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுவரை 33,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.