ஐபில் 2019:பஞ்சாப்-மும்பை மோதல்!டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு

இன்றைய ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

இன்று நடைபெறும் 9  ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி,ஒரு தோல்வி என்று உள்ளது.இந்த போட்டி இரு அணிகளுமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் : ரவிசந்திரன் அஸ்வின்(கேப்டன்), மாயன்க் அகர்வால் ,கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், சர்பராஸ் கான் ,மந்தீப் சிங் ,டேவிட் மில்லர் ,ஹர்தஸ் வில்ஜன் ,முருகன் அஸ்வின் ,ஆண்ட்ரூ டை  மற்றும் முகமது ஷமி  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன் அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்),சூர்யகுமார் யாதவ்,யுவ்ராஜ் சிங், குவிண்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்),கேரன் பொலார்டு,ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா,மாயன்க் மார்கண்டே, லசீத் மலிங்கா, ஜஸ்பிரிட் பும்ரா,மேக்லனகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Leave a Comment