இன்று சுதந்திர போராட்ட தியாகி நீலமேகம் பிள்ளை நினைவுதினம்…!

இன்று சுதந்திர போராட்ட தியாகி நீலமேகம் பிள்ளை நினைவுதினம்.

மதுரை மாவட்டம் கனகவேல் காலனி பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் பிள்ளை. இவர், தொழிற்சங்கத்தில் பணியாற்றி வந்த நிலையில், 1942-ம் ஆண்டு தனது 21-ஆவது வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

அவரது மனைவி மயிலம்மாள், இவருக்கு பிச்சைமணி என்ற ஒரு மகனும் 3 பேத்திகளும் உள்ளனர். இவர் தனது 93-வது வயதில் 2014-ம் ஆண்டு, ஜூலை மாதம் 8-ம் தேதி காலமானார். இவர் தான் இறந்ததும் மருத்துவக்கல்லூரி ஆய்வுக்கு பயன்படும் வகையில் தனது உடலை, தானம் செய்யுமாறு உயில் எழுதிவைத்துள்ளார்.

இதனையடுத்து, நீலமேகம் பிள்ளை ஆசைப்படியே, அவர் காலமான பின் அவரது பெயர் காயத்ரி தேவி, தாமரைச்செல்வி, பூமாராணி ஆகியோர் மதுரை மருத்துவக்கல்லூரி உடல்கூறு கழக இயக்குனர் மற்றும் பேராசிரியரிடம் ஒப்படைத்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.