உடனே போங்க…12ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி.!

மாணவர்கள் கவனத்திற்கு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரகளில்  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். 

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது.

தற்போது, 12ம் வகுப்பில் தேர்வானவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுவரை அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக 2.37லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 8 முதல் தமிழகத்தில் 633 தனியார் கல்லூரிகள், 163 அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.