இன்று 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கும்,  சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலைப்பகுதியில், கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வல்வில் ஓரி விழா கொண்டப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 5 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கிய அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆடிப்பெருக்கையொட்டி மற்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து தலைமை முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.