இன்று டெல்லியில், நாளை தமிழகத்தில்.! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவர்.!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 50 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 70 தொகுதிகளில் 56 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக  அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க உள்ளது. இதனை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி டெல்லி மக்களுக்கு நன்றி என தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லி முதல்வருக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். அதில் மீண்டும் டெல்லியில் வென்றதுக்கு வாழ்த்துக்கள் எனவும், அடுத்த ஆண்டு இதை தமிழ்நாட்டு மக்கள் பின்பற்றுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்