மக்களின் சுமையை குறைக்க மின்கட்டணத்தை 2 மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் – சீமான்

மின்சாரக் கட்டணத்தை 2 மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவை தொகை செலுத்த வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் நேற்று முதல் 24ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா முதல் அலையையொட்டி கடந்த ஆண்டில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களும், தொழில்துறையினரும் மீண்டுவர முடியாத நிலை உள்ளது.

தற்போது கொரோனா 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் வேலையிழப்பு, வருமானம் இழப்பு, தொழில்முடக்கம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த பேரிடம் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான துயர்துடைப்பு உதவிகளை வழங்கும் திட்டங்களை செயல்படுத்து உறுதுணையாக இருக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ஏற்கனவே, அண்டை மாநிலமான கேரளத்தில் மக்கள் படுகின்ற இன்னல்களை உணர்ந்து, குடிநீர் மற்றும் மின்சார கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.

ஆகவே, ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு முழுமையாக ரத்து செய்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

4 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

10 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

11 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

12 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

13 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

13 hours ago