மின்சாரக் கட்டணத்தை 2 மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவை தொகை செலுத்த வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் நேற்று முதல் 24ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா முதல் அலையையொட்டி கடந்த ஆண்டில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களும், தொழில்துறையினரும் மீண்டுவர முடியாத நிலை உள்ளது.
தற்போது கொரோனா 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் வேலையிழப்பு, வருமானம் இழப்பு, தொழில்முடக்கம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த பேரிடம் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான துயர்துடைப்பு உதவிகளை வழங்கும் திட்டங்களை செயல்படுத்து உறுதுணையாக இருக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ஏற்கனவே, அண்டை மாநிலமான கேரளத்தில் மக்கள் படுகின்ற இன்னல்களை உணர்ந்து, குடிநீர் மற்றும் மின்சார கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.
ஆகவே, ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு முழுமையாக ரத்து செய்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…