10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும் சிறைத்துறையில் வேலை வாய்ப்பு.! TNPSC அறிவிப்பு.!

தமிழ்நாட்டின் சிறைத்துறையில் காலியாக உள்ள 59 உதவி ஜெயிலர் பணியிடங்களை நிரப்ப, வரும் ஜூலை 1ம் தேதி அன்று எழுத்துத்தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

அதில், ஆண்கள் பணியிடங்கள் – 54

பெண்கள் பணியிடங்கள் – 5 என கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் மே 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சிறைத்துறை விண்ணப்ப கட்டணம்:

Registration Fee  – ரூ.150
Examination Fee  – ரூ.100

சம்பள விவரம்:

உதவி ஜெயிலர் (ASSISTANT JAILOR) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

10 மற்றும் 12 வகுப்பு அல்லது இளங்கலை பட்டப் படிப்பு, இதில் ஏதேனும் படித்திருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும்  உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு  https://tnpsc.gov.in/Document/english/09_23_Asst_Jailor_ENG.pdfஎன்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment