புகார் கொடுக்க வந்த பெண்மணியை மின் மோட்டார் கொண்டு தூக்கி எறிந்து தாக்க முற்பட்ட மின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பகுதியில், அடிக்கடி மின் விநியோகம் தடைபட்டு வந்ததால், ஒரு பெண்மணி தனது உறவினர் உடன் மின் அலுவலகம் வந்து புகார் அளிக்க வந்துள்ளார்.
ஆனால், அவரை புகார் அளிக்க விடாமலும், அதிகாரியை சந்திக்க விடாமலும், மின் ஊழியர் குப்புராஜ் என்பவர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, பெண்மணி உடன் வந்த உறவினர், குப்புராஜ் நடவடிக்கையை போனில் படம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்.
இதனை கண்டதும், குப்புராஜ் அதிக கோபமுற்று, தகாத வார்த்தைகளால் திட்டி, திடீரென அருகில் இருந்த மின் மோட்டரை எடுத்து இவர்களை நோக்கி எறிந்துவிட்டார். அது வும் வீடியோவில் பதிவாகிவிட்டது. இதனை அவர் இணையத்தில் பதிவிட,
தமிழகம் முழுவதும், இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகிவிட்டது. இதனை அடுத்து, தற்போது ஒழுங்கு நடவடிக்கையாக, அரசு மின் துறை குப்புராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.