மதுரை, கோவையில் கொரோனா அதிகரிப்பு ! – சுகாதாரத்துறை அறிவிப்பு

மதுரை, கோவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை மற்றும் கோவையில் நேற்று ஒரு நாளில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  88ஆக உயர்ந்துள்ளது. கோவையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக உயரிந்துள்ளது.

author avatar
Vidhusan