திருப்பதி கோவில்.., ஆர்ஜித சேவையில் பங்கேற்க தடை..!

திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவையில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று அறங்காவல் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையில் முடிவை  தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan