டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி!

உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து, தீராத வயிற்றுவலி காரணமாக தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

டிக்டாக்கில் “செத்த பயலே, நார பயலே” எனும் வசனம் மூலம் பிரபலமடைந்தவர், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து.  இவர் அண்மையில் தீராத வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் அவருக்கு வயிற்று வலி தீவிரமடைந்ததை அடுத்து, வலி தாங்காமல் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதுதொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக, அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் கூறிவருகின்றனர்.