அமெரிக்காவில் 3,80,000 வீடியோக்களை நீக்கிய டிக்டாக் .!

கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி இந்த நிலையில், அமெரிக்காவில் பாதுகாப்பு காரணமாக  டிக்டாக்  தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்க அரசு தரப்பில் இருந்து எழுந்து உள்ளது.

மேலும், அமெரிக்க மக்களிடம் அதிக அளவில் பிரபலமாகிய டிக்டாக் செயலி மூலம்  தகவல் கசிய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். இதனால், சீனாவின் பைட்டான் நிறுவனத்தின் சொந்தமான டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

மேலும், டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில்,  இந்த ஆண்டு  அமெரிக்காவில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்த 3,80,000 வீடியோக்களை நீக்கியதாகவும், வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை பதிவிட்ட 1,300 கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. மேலும், 64,000 கருத்துகளும் நீக்கப்பட்டன என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan