புலி தன் காயத்தை நக்கி ஆற்றும்! குரங்கு தன் புண்னை பிய்த்து ரணமாக்கி இறக்கும்! நடிகர் விவேக்கின் அதிரடியான ட்வீட்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமாவில் மட்டுமே  அக்கறை செலுத்தாமல் சமூக அக்கறை கொண்டவராகவும்  வருகிறார். இவர் மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு போன்றவை  குறித்து பல விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘வலைத்தளத்தில் 100 பேரில் 98 பேர் நேர்மறையோரே! 2 பேர் எதிர்மறையோர் இருக்கலாம்.அவர்களை அலட்சியம் செய்யப் பழகுங்கள்.சாதனையாளரை பிரபலங்களை பழித்தும் இழித்தும் பதிவிடுவதில் அவர்கள் சுகம் காண்பர். புலி தன் காயத்தை நக்கி ஆற்றும்; குரங்கு தன் புண்னை பிய்த்து ரணமாக்கி இறக்கும்.அவரவர் வழி!’ என பதிவிட்டுள்ளார்.

;

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.