அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,படத்தின் டிரைலரை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார். டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. டிரைலரை பார்க்கையில், படம் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. எனவே கண்டிப்பாக படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு டிரைலர் உலக சாதனை :
உலகளவில் ஹாலோகிராம் மூலம் வெளியிடப்பட உள்ள முதல் இந்திய படத்தின் டிரைலர் என்ற சாதனையை ‘துணிவு’ படத்தின் டிரைலர் படைத்துள்ளது. மலேசியாவின் ‘Kuala Lumpur City Centre ‘ என்ற இடத்தில், இன்று இரவு 11 மணிக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…