இ பாஸ் இல்லாததால் தமிழகம் வந்தவர்கள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பினார்.!

டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாததால்  மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று முதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு  சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி , விமானத்தில் வரும் பயணிகள் நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் கொரோனா பரிசோதனை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள், அதுவரை அரசின் கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மேலும், கையில் சீல் வைப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. பிற மாநிலங்களில் இருந்து  தமிழகம் வரும்  பயணிகள் இ பாஸ்  பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இ பாஸ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் இருந்து கோவை விமானநிலையம் வந்த 4 பயணிகளிடம் இ பாஸ் இல்லாததால்  மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

author avatar
Dinasuvadu desk