தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைப்பு!

தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைப்பு.

தூத்துக்குடியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனமானது, அங்குள்ள வி.இ  சாலையில், 5 மாடி கட்டிடங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனதத்தில் ஜவுளி விற்பனை, நகை விற்பனை மற்றும் சூப்பர் மார்க்கெட் பொருட்கள் போன்ற பிரிவுகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனம் சூப்பர் மார்க்கெட்  இயங்கும் கட்டடம்  அனுமதியை மாநகராட்சியிடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியும் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.