1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, இன்று தூத்துக்குடியில் எம்.பி கனிமொழி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார்.
இன்று அதே போல பல்வேறு மாவட்டங்களில் ஆளும்கட்சியினர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி அவர்கள் இன்று காலை உணவு திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குகாலை உணவை அவரே பரிமாறி தொடங்கி வைத்தார்.
பரிமாறிவிட்டு, சாப்பாட்டை வீண் செய்யக்கூடாது. காய்கறிகளை அப்படியே சாப்பிட வேண்டும். அதுதான் சத்து தரும். என கனிவோடு மாணவர்களிடம் கூறிவிட்டு, அவரும் மாணவர்களோடு காலை உணவு சாப்பிட்டார்.