இந்த ஆண்டில் மட்டும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2.8 மில்லியன் குழாய் நீர் இணைப்பு!

2021 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து தற்பொழுது வரை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் என்பது 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குழாய் இணைப்புகள் உருவாக்கி பாதுகாப்பான தண்ணீர் வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

இதன் பின்பதாக இதுவரை 43.9 மில்லியன் வீடுகளுக்கு வீட்டு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal