நடிகை நயன்தாரா தனித்து நிற்க இது தான் காரணம் -ஆர்.ஜே.பாலாஜி

நடிகை நயன்தாரா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி. 

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும் ஆவார். இவர், தமிழில் புத்தகம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்நிலையில், நடிகர் பாலாஜி சமீபத்தில், இன்ஸ்ட்டாகிராமில் கலந்துரையாடலில் பங்குபெற்றார். அப்போது அவரது, இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கலந்துரையாடலின் போது, நடிகை நயன்தாரா குறித்து பேசிய இவர், ‘தன்னுடன் நடித்த ஹீரோயின்களில் நயன்தாரா ஒழுக்கமானவர் என்றும், அதனால் தான் அவர் தனித்து நிற்கிறார்.’ என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.