உங்கள் பாவங்கள் நீங்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் நிறைவேற இந்த கணபதி மந்திரம் போதும்..!

உங்கள் பாவங்களை நீக்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற இந்த ஒரு கணபதி மந்திரம் போதும்.

பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி விட்டு தான் தொடங்குவோம். முழுமுதற்கடவுளாக விளங்கும் விநாயகரை மனதார வேண்டி விட்டு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும். உங்களது வேண்டுதல்கள் நல்லபடியாக நிறைவேறிட கணபதியின் இந்த கணநாயகாஷ்டகம் மந்திரத்தை படித்திட உங்களது பாவங்கள் நீங்கி வேண்டுதல் நிறைவேறிடும்.

விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்பதால் அவரை நினைத்து வழிபட்டாலே உங்களது வாழ்க்கையில் நீங்கள் வேண்டிய பலன்கள் கிடைக்க தொடங்கும். அதிலும் குறிப்பாக விநாயகர் மந்திரங்களில் முக்கியமான ஒரு மந்திரம் இந்த கணநாயகாஷ்டகம் மந்திரம். இந்த மந்திரத்தை விநாயகருக்கு உகந்த நாளான சங்கடஹர சதுர்த்தி மற்றும் புதன் கிழமையில் படிக்க வேண்டும்.

விநாயக பெருமானுக்கு பிடித்த அருகம்புல், வெள்ளெருக்கு இவற்றில் மாலை செய்து அணிவிக்கலாம். இப்படி அணிவிப்பதன் மூலம் நீங்கள் வேண்ட நினைக்கும் விஷயம் எத்தகைய தடங்கலும் இல்லாமல் நிறைவேறும். மேலும், விநாயகருக்கு பிடித்த அரச மர இலை இருபத்தி ஒன்று என்ற கணக்கில் எடுத்து கொண்டு விநாயகர் முன்னிலையில் வைத்து கொள்ள வேண்டும்.

பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை அல்லது சுண்டல் போன்று பிரசாதம் செய்து வைத்து அவர் முன் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளுங்கள். அப்போது இந்த கணநாயகஷ்டகத்தை படிக்க வேண்டும். அந்த மந்திரம் இதோ,

கணநாயகாஷ்டகம் மந்திரம்: 

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்

லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம்

பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்

பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்

சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம்

பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே

யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா

ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்

ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர:

விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி!!!

இந்த மந்திரத்தை படித்து முடித்து விட்டு உங்கள் வேண்டுதலை விநாயகப்பெருமானிடம் வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். நம்பிக்கையோடு பிள்ளையாரை வழிபாட்டு வாருங்கள், நல்லதே நடக்கும்.

Recent Posts

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

3 mins ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

7 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

13 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

14 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

15 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

16 hours ago