அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சாமியார்.! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.!

திருவண்ணமலையில் தங்கியுள்ள அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியார் மணிகண்டனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

திருவண்ணாமலையில் கடந்த 8 மாதங்களாக அத்தியந்தல் அருணாச்சலவேஸ்வர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருந்தார் அமெரிக்காவை சேர்ந்த 32 வயதுடைய ஆசிலியா. அதே திருவண்ணமலையில் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயதான மணிகண்டன் என்பவர் கிரிவலப்பாதையில் சாமியார்களுள்  ஒருவராக தங்கி வந்துள்ளார். கிரிவலப் பாதையில் சுற்றி திரியும்போது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அமெரிக்க பெண்ணை பார்த்துள்ளார்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக அமெரிக்க பெண்ணை மணிகண்டன்  கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அமெரிக்க பெண் ஆசிலியா தனியாக இருப்பதைஅறிந்த மணிகண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இணைப்பு இருப்பதே கண்டறிந்த மணிகண்டன் அத்துமீறி அவரது வீட்டிற்குச் சென்று அப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது அந்த பெண் தன்னை காத்துக்கொள்ள மணிகண்டனை தாக்கி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். தப்பியோட முயன்ற அந்த சாமியாரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதற்கு பிறகு திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். காயமடைந்த அமெரிக்க பெண் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாமியார் மணிகண்டன் கைது செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை வளையத்திற்குள் உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.