என்னை விஷம் வைத்து கொல்ல பார்க்கிறாங்க… விஷால் பட நடிகை கதறல்.!

தமிழில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்திருந்த நானா படேகர் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

Tanushree Dutta

 தனுஸ்ரீ தத்தா கூறிய புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அப்படி இருந்து நடிகை தனுஸ்ரீ தொடர்ந்து அதுகுறித்து குரல் எழுப்பி வருகிறார்.

இதையும் படியுங்களேன்- ஐயோ..பிக் பாஸ் போன நான் லூசு ஆயிடுவேன்…கதறும் ரேணுகா பிரவீன்.!

Tanushree Dutta

அந்த வகையில், அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில், தான் மீடூ புகார் கூறிய பின்னர் தன்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடந்ததாக அவர் கூறியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tanushree Dutta

இது குறித்து அவர் பேசியதாவது,”என்னை கொலை செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடந்தது.. எனக்கு  விபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் காரின் பிரேக்குகள் பல முறை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. ஒரு முறை விபத்தில் சிக்கி காயம் அடைந்தேன். எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்யவும் முயற்சிகள் நடந்தன” என மிகவும் பதட்டத்துடன் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment