இவர்கள் ஒருமுறை தான்.. ஆனால் விவசாயிகள் நாள் ஒன்றுக்கு “மூன்று முறை” தேவை – இர்பான் பதன்!

ஒரு நாளைக்கு மூன்று வேலை நமக்கு தேவை, ஒரு விவசாயி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் கான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்கள் தினந்தோறும் புதிது புதிதாக போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பி பெற எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதன், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராக தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Once in your life you need a doctor, a lawyer,a policeman,a preacher but everyday,three times a day,you need a farmer. #farmer

— Irfan Pathan (@IrfanPathan) December 23, 2020

அந்த பதிவில் அவர், “நமது வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு போலீஸ்காரர், ஒரு மத போதகர்கள் தேவைப்படும். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று வேலை நமக்கு தேவை, ஒரு விவசாயி என தெரிவித்துள்ளார்.