மே 31 வரை இந்த 4 மாநில மக்கள் உள்ளே வர தடை.!

கர்நாடகாவில்  கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளை சேர்ந்த மக்கள் மாநிலத்திற்குள் வருவதற்கு மே 31 ஆம் தேதி வரை அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் 30 பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், சிகப்பு மண்டலத்தை தவிர, மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மக்கள் யாரும் கர்நாடகாவுக்குள் வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை, மே 31 ஆம் தேதி வரை பொருந்தும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.