“இதை விட பெரிய இழப்பு இல்லை” – பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாக். பிரதமர் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி, அவரது தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்பின், காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரதமரின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்தவகையில், “இதை விட பெரிய இழப்பு இல்லை” என்று பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பதிவில், தாயை இழப்பதை விட பெரிய இழப்பு எதுவும் இல்லை, தாயாரின் மறைவுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார். முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment