நாளை இந்த மாநிலத்தில் விமான சேவை கிடையாது.!

நாளை மேற்கு வங்கத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக  மார்ச் 25 -ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், நாளை முதல்  உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

சமீபத்தில் மேற்கு வங்கம் ஆம்பன் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கு பதிலாக மே 28 முதல் விமான சேவையை அனுமதிக்கவும் என மேற்கு வங்க அரசு கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk