ஜாதி – மத கலவரம்.. துப்பாக்கி சூடு… தமிழகத்தில் இல்லை.! டிஜிபி சைலேந்திர பாபு பெருமிதம்.!

கடந்த 2 ஆண்டுகளாக தமிழக்தில் ஜாதி கலவரம், மத கலவரம், துப்பாக்கி சூடு ஆகியவை இல்லை. – டிஜிபி சைலேந்திர பாபு. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே , ராஜபாளையம் பகுதி பட்டாலியன் பகுதிக்கு ஆய்வு செய்ய டிஜிபு சைலேந்திர பாபு , அங்கு புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார்.

48 உயிரிழப்புகள் :

பின்னர் பேசிய அவர், கடந்த 1995-1996 காலகட்டத்தில் இந்த ராஜபாளையம் பகுதியில் ஜாதி கலவரங்கள் நடந்தன. அப்போது 48 உயிரழப்புகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது அது மாதிரியான நிலை இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.

தமிழக காவல்துறை முதலிடம் :

மேலும், புலன் விசாரணையில் தமிழக காவல் துறை முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற காவலர் பணித்திறன் தேர்வில், 11 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக காவல்துறை என பெருமையாக பேசினார்.

பொன்விழா ஆண்டு :

கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக காவல்துறையில் மகளிர் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை  போன் விழா ஆண்டாக கொண்டாடி வருவதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment