தேனி குரங்கனி மலை தீ விபத்து நீதி விசாரணை தேவை…!!

தேனி மாவட்டம் கேரளாவை ஒட்டியுள்ள குரங்கனி மலைப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாகவே தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த குரங்கணி மலைக்கு டிரெக்கிங் செல்ல மாணவிகளை அழைத்துச்சென்றது சரியா? “அவர்கள் எங்களுடைய அனுமதி பெறவில்லை” என்று வனத்துறையினர் சொல்கின்றனர். “இவ்வாறு அனுமதி இன்றியே எப்போதும் அவர்களது விருப்பத்துக்கேற்ப அவர்கள் டிரெக்கிங் செல்கின்றனர்” என்றும் சொல்கிறார்கள். இது குறித்தும் நீதி விசாரணை தேவை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்,அரசியல் தலைவர்களும் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment