கோவாவில் புதிய படங்கள் வெளியாகும் வரை திரையரங்குகள் திறக்கப்படாது.!

கோவாவில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் புதிய படங்கள் வெளியாகும் வரை  திறக்கப்படாது என்று கூறியுள்ளனர்.

நாளை முதல் கோவாவில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை கேசினோக்கள் மூடப்படும் என்றும் முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய திரைப்படங்கள் வெளியாகும் வரை நாங்கள் திரையரங்குகளைத் திறக்கப் போவதில்லை என்று பாஜக எம்எல்ஏ மற்றும் அனைத்து கோவா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிரவீன் ஜான்டே கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.