மலை பாம்பை கையில் கடிக்க வைத்து உடலில் என்ன நிகழ்கிறது என்று ஆராய்ச்சி செய்த இளைஞர் !

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் ஆடம் தோரன்.இவர் மலை பாம்பை கடிக்க வைத்து அதனால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையை ஆராய்ச்சி  செய்வதற்காக  முயற்சியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இவர் ஹிஸ்டரி சானலில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் இவர் ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் அவர் மலை பாம்பு கடித்தால் உடலில் ஏற்படும் வலி மற்றும் ஒவ்வாமை பற்றி ஆராய்ச்சியில் செய்யும் முயற்சியில் ஈடுபட 6 அடி நீளம் கொண்ட  பர்மிய மலை பாம்பு கொண்டு வர பட்டு ஆடமின் மீது விடப்பட்டது.

 
அந்த பாம்பை விட்ட அடுத்த நொடியே பாம்பு தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. அப்போது அந்த பாம்பு ஆடமின் கைப்பகுதியில் நன்றாக கடித்து விட்டது.
இறுதியில் இந்த சோதனை முடிவடைந்த பிறகு அவருடைய காயத்திற்கு தையல் போட பட்டது.