திருமணமான முதல் நாளில் மணமகளுக்கு தெரியவந்த உண்மை!பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர்!

  • திருமணமான முதல் நாளில் மணப்பெண்ணுக்கு தெரியவந்த உண்மை.பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர்.
  • சகித்து கொள்ள முடியாமல் எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்த பெண்.

திருவனந்தபுரத்தில் உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் ஆவார்.இவரது மக்கள் ஆனிலதா ஆவார்.இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வட சேரி பகுதியில் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கறை பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் தனது உடல்நிலை சரியில்லாத அத்தையை பார்க்க நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு வந்த போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறி அதிமுக நிர்வாகியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் திருமணத்திற்கு முன்பு ஆனிலதாவிடம் மீன் குத்தகைக்காகவும் டாஸ் மார்க்கை ஏலம் எடுப்பதற்காகவும் பணத்தையும் நகைகளையும் வாங்கியுள்ளார்.திருமணம் ஆன முதல் நாளில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனிலதா அவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு ஆத்திரம் அடைந்த கணவர் அவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளார்.ஆனாலும் ஆனிலதா கணவருடன் சகித்து கொண்டு வாழ தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை வட்டத்தில் உள்ள பூதபாண்டி பகுதியை சேர்ந்த பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று கருக்கலைப்பு வரை சென்றது ஆனிலதாவிற்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் கணவரின் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர்கள் ஏற்கனவே உனக்கு தெரியும் என நாங்கள் நினைத்தோம் என்று தெனாவட்டாக பதிலளித்துள்ளனர்.மேலும் அவரின் கணவருக்கு பல பெண்களிடம் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதில் ஆனிலதாவை கணவர் தாக்கியதில் கைமுறிவு ஏற்பட்டுள்ளது.தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கிடைத்துள்ளது.

இதன் காரணமாக காவல்துறையினர் அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆனிலதா எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

5 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

11 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

12 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

13 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

14 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

15 hours ago