எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா.?

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். சத்யராஜ், வினை, சூரி,புகழ், சரண்யா, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளியான நாளிலிருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 72கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.