பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்! மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்நாத் வருகை!

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமர்நாத் வருகை.

மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, வரும் 21-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த அமர்நாத் யாத்திரையை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக ராணுவ அதிகாரி  பிரிகேடியர் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவு துறை வழியாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றும், ஆனால் அதனை முறியடிக்க திறனும், படைபலமும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராஜ்நாத் சிங் இரண்டு நாள் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்ட நிலையில்,பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அமர்நாத்க்கு வருகை தர உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.