முதலமைச்சரின் 14 நாள்கள் வெளிநாட்டு பயணம் உறுதியானது ..!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று  நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது .தற்போது முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் செல்கிறார். அங்கிருந்து செப்டம்பர் 1-ம் தேதி புறப்பட்டு 2-ம் தேதி நியூயார்க் செல்கிறார்.அங்கு கலிபோர்னியா கால்நடை பண்ணை பார்வையிடுகிறார். பின்னர் அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில் 8, 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.இறுதியாக 10-ம் தேதி தமிழகம் திரும்புகிறார் முதலமைச்சர்.