3 மாத கால அவகாசத்துக்குள் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
கர்நாடக அரசானது, தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை கட்ட தீர்மானித்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்காமல் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை அமைக்க தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று வந்த போது, தீர்ப்பாயம் அமைக்க 6 மாத கால அவகாசத்தை மத்திய அரசு கோரியது. அதனை நிராகரித்து 3 மாத கால அவகாசத்துக்குள் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ந