காக்க காக்க படத்தின் கதை முதலில் இந்த டாப் ஹீரோக்களிடம் தான் கூறப்பட்டதாம்.! யார் யார் தெரியுமா.?

சூர்யாவின் காக்க காக்க படத்தின் கதையை முதலில் அஜித் மற்றும் விக்ரமுக்கு தான் கௌதம் மேனன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கௌதம் மேனன் காக்க காக்க படத்தின் நினைவுகளை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், முதலில் காக்க காக்க திரைப்படத்தின் கதை ஜோதிகாவினனை தான் சந்தித்து கூறியதாகவும், அவர் தான் அஜித் அல்லது விக்ரம் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாகவும் கூறினார். அதன் பின்னர் அஜித் மற்றும் விக்ரமுக்கு காக்க காக்க படத்தின் கதையை கூறியதாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் இருவராலும் இந்த படத்தில் நடிக்க இயலவில்லை என்றும் கூறியுள்ளார்