பெங்களூருவில் மென்பொறியாளர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்..!

பெங்களூருவில் 23 வயது மென்பொறியாளர் அலுவலகத்தின் 12-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள சர்வதேச தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பவேஷ் குமார் ஜெய்ஸ்வால் (Bhavesh Jaiswal)  பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் மிகப் பெரிய ஒரு பொருள் விழுந்ததைப் போன்று சத்தம் கேட்டு காவலாளிகள் ஓடிவந்து பார்த்த போது அங்கு பவேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்னர். பவேஷ்குமாரின் செல்ஃபோன், லாப்டாப் உள்ளிட்டவற்றை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ள போலீசார் மரணத்துகான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment