ஜிகர்தண்டா படத்தின் செக்கன்ட் பார்டா  விக்ரம்-60.?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.

விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். மேலும் விக்ரம் – 60 படத்திலும் தனது மகனான துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் இந்த படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திரங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ல் ஆக்ஷன் திரில்லராக வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது. ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், பாபி சிம்கா, லெட்சுமி மேனன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது விக்ரம் மற்றும் துருவ் நடிக்கும் படம் கேங்க்ஸ்டர் படமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.