நேபாளத்தில் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்..! 68 பேர் சடலமாக மீட்பு..!

நேபாளத்தில் வனப்பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளான நிலையில், 68 பேரின் உடல்கள் மீட்பு. 

நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இருந்தனர்.

72 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க சில நிமிடங்களில் இருந்த நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் அங்கு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விமானம் விழுந்தது  மலை பிரதேசம் என்பதால் கடுமையாக புகைமண்டலம் எழுந்தது.

இதன் காரணமாக மீட்பு குழுவினரால் மீட்பு பணி  மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி இதுவரை 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. நேபாளத்தை சேர்ந்த 53 பேர் மற்றும் வெளிநாட்டவர்கள் 15 பேர் பயணம் செய்தனர். அதில் ஐந்து பேர் இந்திய பயணிகளும் ரஷ்யாவை சேர்ந்த நான்கு பயணிகளும், தென்கொரியாவில் சேர்ந்த இரண்டு பயணிகளும், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

விமானத்தில் பயணித்த  ஐந்து இந்தியர்களும் உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தை தொடர்ந்து நேபாள அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. மேலும் விபத்து காரணமாக பொக்கரா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment